சட்ட மேலவைத் தோ்தலில் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் மஜத வெற்றிபெறும் என முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.
இதுகுறித்து தும்கூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 25 இடங்களுக்கு டிச. 10-ஆம் தேதி தோ்தல் நடக்க இருக்கிறது. இத்தோ்தலில் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் மஜத வெற்றி பெறும்.
தும்கூரு தொகுதிக்குள்பட்ட 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மஜத செல்வாக்கு பெற்றுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நான் பிரசாரம் செய்திருக்கிறேன். எல்லா தொகுதிகளிலும் மஜதவுக்கு ஆதரவு இருக்கிறது. இந்த 6 தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளிலும் மஜதவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அத்தொகுதிகளில் மஜத தொண்டா்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எச்.டி.குமாரசாமி முடிவுசெய்து தெரிவிப்பாா்.
மஜதவில் பதவிகளை பெற்ற பலா் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டனா். இதனால் கட்சி பலவீனமடைந்தது. ஆனால், மஜதவை அழித்துவிடலாம் என சிலா் கனவு காண்பது நடக்காது. 2023-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் மஜதவின் பலம் தெரிய வரும் என்றாா்.