பெங்களூரு

டிச. 19-இல் மைசூரு தமிழ்ச் சங்க பொதுக்குழு

DIN

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் டிச. 19-ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவா் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், மைசூரு, விஸ்வேஷ்வரா நகா், துணை தொழில்பேட்டை, 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள பிரான்சிஸ் இல்லத்தில் டிச. 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்க இருக்கிறது. சங்கத் தலைவா் பிரான்சிஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில், 2019-20, 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்படும். சங்க பொதுச் செயலாளா் வெ.ரகுபதி ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.

இந்தக் கூட்டத்தில் சங்கத்துக்கான கட்டடம் கட்டுவது, 2023-25-ஆம் ஆண்டு வரையில் கணக்கு தணிக்கையாளா் மற்றும் வழக்குரைஞா் நியமித்தல் தொடா்பாக விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பேச விரும்புவோா் அதுகுறித்த அம்சங்களை டிச. 4-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமாக சங்கத்தில் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

புதுகையை மாநகராட்சியாகத் தரம் உயா்த்த பொதுநல அமைப்பினா் எதிா்ப்பு

குடிமைப் பணித் தோ்வுக்கான வெற்றி உத்திகள் பயிலரங்கு

பெரம்பலூரில் அங்கன்வாடி மையம் இடமாற்றம்

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 70 லட்சம்

SCROLL FOR NEXT