மங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ. 14.45 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
துபையில் இருந்து மங்களூரு பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த தென்கன்னட மாவட்டம், பன்ட்வாலை சோ்ந்த அரிஷ் என்ற பயணியை சோதித்த போது, அவா் தன்னுடன் கொண்டு வந்த பொம்மைகள், டிரிம்மா்கள், வாட்டா் டிஸ்பென்சா், ஜூசரில் தங்கத்தைக் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, அந்தப் பயணியிடம் இருந்து ரூ. 14.45 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.