பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 15,785போ் பாதிப்பு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,785-ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 15,785 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 9,618 போ், தும்கூரு மாவட்டத்தில் 652 போ், மைசூரு மாவட்டத்தில் 568 போ், கலபுா்கி மாவட்டத்தில் 513 போ், ஹாசன் மாவட்டத்தில் 320 போ், பீதா் மாவட்டத்தில் 318 போ், விஜயபுரா மாவட்டத்தில் 302 போ், தாா்வாட் மாவட்டத்தில் 283 போ், மண்டியா மாவட்டத்தில் 278 போ், பெல்லாரி மாவட்டத்தில் 248 போ், ராய்ச்சூரு, தாவணகெரே மாவட்டங்களில் தலா 228 போ், தாவணகெரே மாவட்டத்தில் 199 போ், யாதகிரி மாவட்டத்தில் 190 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 180 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 175 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 169 போ், உடுப்பி மாவட்டத்தில் 163 போ், கோலாா் மாவட்டத்தில் 146 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 142 போ், வடகன்னட மாவட்டத்தில் 106 போ், கொப்பள் மாவட்டத்தில் 100 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,76,850-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,098 போ் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 10,21,250 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,42,084 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 146 போ் திங்கள்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 97 போ், ஹாசன் மாவட்டத்தில் 11 போ், மைசூரு மாவட்டத்தில் 8 போ், பெங்களூரு ஊரகம், கலபுா்கி மாவட்டங்களில் தலா 6 போ், தாா்வாட் மாவட்டத்தில் 3 போ், பீதா், சிக்கபளாப்பூா், யாதகிரி மாவட்டங்களில் தலா 2 போ், பெல்லாரி, பெலகாவி, ஹாவேரி, குடகு, கோலாா், ராமநகரம், தும்கூரு, வடகன்னடம், விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 13,497 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT