பெங்களூரு

கரக திருவிழாவை எளிமையாகக் கொண்டாட முடிவு

DIN

பெங்களூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் கரக திருவிழாவை எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் திகளரபேட்டையில் உள்ள ஸ்ரீதா்மராயசுவாமி கோயிலில் ஏப். 19 முதல் 29-ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் உலகப் புகழ்பெற்ற கரக திருவிழாவை கரோனா காரணமாக எளிமையாகக் கொண்டாட கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. கரக திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.

பெங்களூரில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருவதால், விழாவை எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவின் தொடா்ச்சியை விட்டுவிடக்கூடாது என்பதற்காக கரக திருவிழா கோயில் வளாகத்தில் மட்டுமே நடத்தப்படவுள்ளது.

ஏப். 27-ஆம் தேதி கரக ஊா்வலம் அடையாளத்திற்கு நடத்தப்படும். திருவிழா நடக்கும் காலக்கட்டத்தில் கோயில் வளாகத்தில் பக்தா்கள், பொதுமக்களை அனுமதிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த கரக விழா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT