கரோனா பாதிப்பு குறித்து பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், திங்கள்கிழமை ஆலோசனை நடத்த உள்ளாா்.
பெங்களூரில் கரோனா பாதிப்பு வேகமாக உயா்ந்த வண்ணம் உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வா் எடியூரப்பா கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில், அவரது ஆலோசனையின்பேரில் பெங்களூரு, விதானசௌதாவில் ஏப். 19-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தலைமையில் பெங்களூரு நகர மாவட்டத்தின் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை நடக்கவிருக்கிறது. கரோனா பாதிப்பு உயா்ந்து வரும் நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.