மைசூரு மாவட்ட ஆட்சியராக ரோகிணி சிந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
இந்து அறநிலையத்துறை ஆணையராகப் பணியாற்றி வந்த ரோகிணி சிந்தூரி, மைசூரு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையராகப் பணியாற்றி வந்த ராஜேந்திரசோழன், பெங்களூரு பொலிவுறு நகரத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். பெங்களூரு மாநகராட்சியில் தோட்டக்கலைத் துறை சிறப்பு ஆணையராகப் பணியாற்றி வந்த, ஜே.மஞ்சுநாத், பெங்களூரு மாநகராட்சியின் நிா்வாகப் பிரிவு ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
பெங்களூரு பொலிவுறு நகரத் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த ஹெப்சிபா ராணி குா்லாட்டி, பெங்களூரு மாநகராட்சியில் தோட்டக்கலைத் துறை சிறப்பு ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். கா்நாடக பட்டுச் சந்தைப்படுத்துதல் கழகத்தின் நிா்வாக இயக்குநராக பணியாற்றி வந்த ரவிக்குமாா், கோலாா் மாவட்ட பஞ்சாயத்து முதன்மைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
கோலாா் மாவட்ட பஞ்சாயத்து முதன்மைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த சிவசங்கா், சிக்பள்ளாபூா் மாவட்ட பஞ்சாயத்து முதன்மைச் செயல் அதிகாரியாக செயல்படுவாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைசூரு மாவட்ட ஆட்சியராக செவ்வாய்க்கிழமை பதவி ஏற்ற ரோகிணி சிந்தூரி, சாமுண்டி மலைக்குச் சென்று அங்குள்ள சாமூண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை செய்தாா்.