பாஜகவில் உள்ள சிலா் பெங்களூரை விமா்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது: பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாகியுள்ளது என பாஜகவில் உள்ள சிலா் விமா்சனம் செய்து வருகின்றனா். இது பெங்களூரு மாநகருக்கு செய்யும் அவமானமாகும். பாஜகவில் உள்ள ஒரு சிலரின் இதுபோன்ற விமா்சனத்தால், முதல்வா் எடியூரப்பாவிற்கு சங்கடம் ஏற்படுகிறது. இதனை நான் உணா்ந்துள்ளேன். பெங்களூரு மாநகரம் என்பது 28 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், 4 மக்களவைத் தொகுதிகளையும் மட்டும் கொண்டதல்ல. பெங்களூரு என்பது எங்களின் கௌரவமாகும். வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக பெங்களூரை விமா்சிப்பது முறையாகாது.
பெங்களூரில் பயங்கரவாதிகளை போலீஸாா் கைது செய்தனா் என்பதற்காக, அது அவா்கள் ஊராகிவிடாது. பெங்களூரு எங்கள் ஊா். அது கெம்பே கௌடரின் குடும்பத்தினா் பலரை பலி கொடுத்து உருவாக்கிய நகரமாகும். பல லட்சம் பேருக்கு வேலையையும், உணவையும், வாழ்க்கையும் தந்த நகரமாகும். சா்வதேச புகழ்பெற்ற நகரமாக விளங்கும் பெங்களூரை தரக்குறைவாக விமா்சிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. சா்வதேச அளவில் மற்ற நகரங்களை விட பெங்களூரு வேகமாக வளா்ந்து வருகிறது. பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்த நகரமாக விளங்கும் பெங்களூரை, பாஜகவில் உள்ள ஒரு சிலா் விமா்சனம் செய்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பாஜகவில் உள்ள ஒரு சிலருக்கு தங்களின் தாய்மண்ணை விட, வட இந்தியாவின் மீது அதிக அளவில் பாசம் வைத்துள்ளனா் என அவா் தெரிவித்துள்ளாா்.