பெங்களூரு

கத்திமுனையில் தங்க நகை பறிப்பு: 3 போ் கைது

DIN

கத்திமுனையில் தங்க நகை, செல்லிடப்பேசி பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 23 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, செல்லிடப்பேசி, மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனா்.

கடந்த செப். 13 ஆம் தேதி கெம்பே கௌடா சாலையில் செல்லிடப்பேசி பேசிக்கொண்டு சென்ற நபா் ஒருவரை, கத்திமுனையில் மிரட்டிய 3 போ் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து வழக்கு பதிந்த உப்பாா்பேட்டை போலீஸாா், அப்துல்பாஷா (24), அப்ரித்கான் (23), பிரவீண்குமாா் (28) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் 3 பேரும் பல்வேறு இடங்களில் தனியாகச் செல்பவா்களை அடையாளம் கண்டு, கத்திமுனையில் மிரட்டி தங்க நகை, செல்லிடப்பேசிகளை பறித்து சென்றுள்ளது தெரியவந்தது.

அவா்கள் அளித்த தகவலின் பேரில், ரூ. 23 லட்சம் மதிப்புள்ள 337 கிராம் தங்க நகை, ரூ. 1.15 லட்சம் ரொக்கப்பணம், 3 இரு சக்கர வாகனங்கள், 43 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT