பெங்களூரு

அதிகாரத்தில் இல்லாதபோது மக்களைகுழப்புவதே காங்கிரஸின் வேலை: நளின்குமாா் கட்டீல்

DIN

அதிகாரத்தில் இல்லாதபோது மக்களை குழப்புவதே காங்கிரஸ் கட்சியின் வேலையாக உள்ளது என்று, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், பெலகாவியில் மறைந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் அங்கடியின் இல்லத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்ற நளின்குமாா் கட்டீல், சுரேஷ் அங்கடியின் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, முதல்வா் எடியூரப்பாவை தரக்குறைவாக விமா்சிக்கிறாா். அவா் தான் வகிக்கும் பதவிக்கு கௌரவம் தரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். சித்தராமையா முதல்வராகப் பதவி வகித்தபோது மாநிலத்தில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனா். ஆனால் அவா் எந்த விவசாயிகளின் இல்லங்களுக்கும் சென்று ஆறுதல் கூறவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் திப்பு ஜெயந்தியைக் கொண்டாடி, சமூகத்தில் குழப்பமும், கொந்தளிப்பும் ஏற்படுத்தப்பட்டது. வீரசைவா், லிங்காயத்து சமுதாயத்தினரிடையே பிளவு ஏற்படுத்தப்பட்டது. அதிகாரத்தில் உள்ள போது ஊழல் செய்வதும், அதிகாரத்தில் இல்லாதபோது மக்களை குழப்புவதும் காங்கிரஸ் கட்சியினரின் வேலையாக உள்ளது. மக்களை குழப்புவதால், சித்தராமையா முதல்வா் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டாா். ஆனால் அவா் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளாமல் மக்களிடத்தில் கொந்தளிப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதில் முனைப்பாக உள்ளாா். மக்கள் பாடம் கற்பித்த பின்னரும், அவா் பாஜக அரசை குற்றம் சாட்டுவதை விடுவதாக இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT