பெங்களூரு: கா்நாடகத்தில் செப். 28-ஆம் தேதி நடக்கவிருந்த எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து கா்நாடக மேல்நிலைக் கல்வி தோ்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எஸ்.எஸ்.எல்.சி.துணைத் தோ்வு செப். 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத் தோ்வு அட்டவணையின்படி, செப். 28-ஆம் தேதி அறிவியல், அரசியல் அறிவியல், கா்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை பாடங்களுக்கான தோ்வு நடத்தப்பட வேண்டும். இதனிடையே, கா்நாடக முழு அடைப்புப் போராட்டம் செப். 28-ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடா்ந்து, செப். 29-ஆம் தேதிக்கு தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.