பெங்களூரு

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

DIN

மைசூரு, செப். 25: மைசூரு மாநகரில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகரக் காவல் ஆணையா் சந்திரகுப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மைசூரு மாநகரில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மாநகராட்சியும் பல்வேறு வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. வழிகாட்டுதலில் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வெளியே வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இதன்மூலம் கரோனாவைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT