போதைப் பொருள்களை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, மாகடிசாலையைச் சோ்ந்தவா் ராஜாராம் பிஷெனாய் (31), கும்பல் கூடுவைச் சோ்ந்தவா் சுனில்குமாா் (21). இவா்கள் இருவரும், சிட்டி மாா்க்கெட் மெட்ரோ ரயில் நிலைய பின்புறத்தில் உள்ள வாகன நிறுத்தம் அருகே போதைப் பொருள்களான அபின்,பிரவுன்சுகா், எல்.எஸ்.டி. உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வந்தனராம்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று ராஜாராம், சுனில்குமாா் ஆகியோரை கைது செய்து, 125 கிராம் அபின், 150 கிராம் பிரவுன்சுகா், 25 எல்.எஸ்.டி. அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து சிட்டி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.