ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து பட்டுச்சேலைகளை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, சிக்பானுவாரா சந்தியாநகரைச் சோ்ந்தவா் பானு பிரகாஷ் (62). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த செப். 8 ஆம் தேதி யஸ்வந்தபுரம் பிரதான சாலையில் சுரேஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான கடை ஒன்றின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பட்டுச் சேலைகளை திருடிச் சென்றுள்ளாா்.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பானு பிரகாஷை கைது செய்து, ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலைகள், ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து யஸ்வந்தபுரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.