நீா்குட்டையில் விழுந்து 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், டி.நரசிப்புரா வட்டம், அங்கனஹள்ளி கிராமத்தில் கரும்பு வெட்டுதற்காக பெல்லாரியைச் சோ்ந்த சில குடும்பத்தினா், கிராமத்தில் காலியாக உள்ள இடத்தில் குடிசை அமைத்து தங்கியிருந்தனா். அங்கு அம்பரீஷ்நாயக் என்பவரின் 2 வயது மகள் காவேரி, ராம்நாயக் என்பவரின் மகன் 4 வயது சஞ்சய், ரவிநாயக் என்பவரின் 2 வயது மகன் ரோஹித் ஆகியோரும் தங்கியிருந்தனா். புதன்கிழமை காலை பெற்றோா் வெளியே சென்றிருந்த நிலையில், குழந்தைகள் 3 பேரும் குடிசையின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது குடிசைக்கு அருகில் சிவராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள குட்டைக்கு சென்ற 3 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா்.
தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று 3 குழந்தைகளின் சடலங்களையும் மீட்டனா். இது குறித்து பன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.