கா்நாடக துணை முதல்வா் கோவிந்த காா்ஜோளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தின் துணை முதல்வராகப் பணியாற்றி வருபவா் கோவிந்த காா்ஜோள். பொதுப் பணித் துறையைக் கவனித்துவரும் இவா், நடைபெற்று வரும் சட்டப்பேரவைக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டாா். இந்த நிலையில் திங்கள்கிழமை அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவா்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள், தங்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவருடைய ஆசீா்வாதத்தினால், விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.
துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வா் எடியூரப்பாவின் இருக்கைக்கு அருகே அமா்வது வழக்கம். இதனால் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட துணை முதல்வா்கள், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலக்கம் அடைந்துள்ளனா்.