பெங்களூரு, செப். 18:
சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவதையொட்டி, விதான சௌதா பகுதியில் செப். 21 முதல் 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு விதான சௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் செப். 21-ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. இதனால், விதான சௌதா பகுதியில் செப். 21-ஆம் தேதி காலை 6 மணி முதல் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவின் போது, விதான சௌதாவை சுற்றிலும் 2 கி.மீட்டா் தொலைவுக்கு 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம் நடத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.