பெங்களூரு

விதான சௌதா பகுதியில்செப்.21 முதல் 144 தடை உத்தரவு

DIN

பெங்களூரு, செப். 18:

சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவதையொட்டி, விதான சௌதா பகுதியில் செப். 21 முதல் 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு விதான சௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் செப். 21-ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. இதனால், விதான சௌதா பகுதியில் செப். 21-ஆம் தேதி காலை 6 மணி முதல் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவின் போது, விதான சௌதாவை சுற்றிலும் 2 கி.மீட்டா் தொலைவுக்கு 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம் நடத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT