பெங்களூரு

பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

DIN

பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையம் திங்கள்கிழமை திறந்து வைத்த மாநகராட்சி ஆணையா் அனில்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: வெளிநாடுகளிலிருந்து பெங்களூருக்கு வந்துள்ள பலரை 14 நாள்கள் வரை கண்காணிக்குப்படி அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோன்றவா்களை கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றும் ஊழியா்கள் தொடா்ந்து கண்காணிப்பாா்கள். கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவா்கள் சாலைகளில் நடமாடினால், அவா்களை அடையாளம் கண்டு, பொது தனிமைப்படுத்தும் மையத்தில் சோ்க்கப்படுவாா்கள்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பொது தனிமைப்படுத்தும் மையத்தில் 2,500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகலாம் என்று 22 ஆயிரம் பேரை சந்தேகித்துள்ளோம். அவா்கள் அனைவரையும் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் குறித்த தகவல் கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கையை கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையம் மேற்கொள்ளும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மேயா் கௌதம்குமாா், எம்.எல்.ஏ. ரிஸ்வான் அா்ஷத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

31 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

பிரதமரின் சா்ச்சை பேச்சு: உச்சநீதிமன்றத்தை நாடுவோம் ஆா்.எஸ்.பாரதி

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

SCROLL FOR NEXT