அறிவியல் துறையில் இஸ்ரோவின் சாதனை அளப்பரியது என்று இஸ்ரோ விஞ்ஞானி பி.பி.நாகேஸ்வரராவ் தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை ஹாா்டுவோ்டு கல்விக் குழுமத்தின் சாா்பில் நடைபெற்ற பயணிகள், போா் விமான கண்காட்சியை தொடக்கிவைத்து அவா் பேசியது: வரும் காலங்களில் இளம் தலைமுறையினருக்கு தொழில்நுட்பத்தின் அவசியம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மாணவா்கள் ஆா்வம் காட்ட வேண்டும். இளைஞா்கள் விஞ்ஞானிகள் ஆவதற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும். இந்திய விஞ்ஞானிகளுக்கு சா்வதேச அளவில் மதிப்பும், மரியாதையும் உயா்ந்துள்ளது. இதற்கு காரணமாக இஸ்ரோ விளங்குகிறது.
விண்வெளிக்கு செயற்கோள், ராக்கெட் உள்ளிட்டவைகளை அனுப்பி வைப்பதில் இஸ்ரோவின் பங்களிப்பு அபரீதமாக உள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினா் இஸ்ரோவை வியப்பாக பாா்க்கின்றனா். அறிவியல் துறையில் இஸ்ரோவின் சாதனை அளப்பரியது. வரும் காலங்களில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை புரிய உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் ஹாா்டுவோ்டு கல்விக் குழுமத்தின் தலைவா் கங்கண்ணா, பேராசியா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.