மது அருந்தி வாகனம் ஓட்டியதாக, 918 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெங்களூரு மாநகரின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 2 மணி வரை போக்குவரத்து போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
பேருந்து, லாரி, காா், ஆட்டோ, மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், 993 போ் மது அருந்தி வாகனங்களை ஓட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்யுமாறு மண்டலப் போக்குவரத்து அலுவலகத்துக்கு மாநகர போக்குவரத்து போலீஸாா் பரிந்துரை அனுப்பினா்.