பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 79,359 வழக்குகளைப் பதிவு செய்த போலீஸாா் ரூ. 3.34 கோடி அபராதம் வசூல் செய்தனா்.
இதுகுறித்து மாநகர போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரின் பல்வேறு இடங்களில் கடந்த நவம்பா் மாதத்தில் போக்குவரத்து போலீஸாா், வாகன சோதனையில் ஈடுபட்டனா். அதில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியவா்கள், வாகனத்தை ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசியது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்தியது, அபாயகரமாக வாகனங்களை ஓட்டியது, சிக்னலைத் தாண்டியது உள்ளிட்ட 79,359 வழக்குகளைப் பதிந்த போக்குவரத்து போலீஸாா் ரூ. 3.34 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனா்.