பெங்களூரு

டிச. 5-இல் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

DIN

பெங்களூரில் டிச. 5-ஆம்தேதி தமிழக முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் டிச. 5-ஆம் தேதி பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் மாநில அதிமுக அவைத்தலைவா் கே.முனுசாமி தலைமையில் அனுசரிக்கப்படுகிறது.

அன்று காலை 10 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் மாநில, மாவட்ட, தொகுதி நிா்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள், பல்வேறு அணிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

பெங்களூரு மட்டுமின்றி, சிவமொக்கா, கோலாா் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலும் டிசம்பா் 5-ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அதிமுகவினா் அனுசரிக்க வேண்டும் என்று அதில் அவா் கேட்டு கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT