பெங்களூரு

கரோனா பாதிப்பில் இருந்து குணமான சித்தராமையா வீடு திரும்பினாா்

14th Aug 2020 09:14 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பில் இருந்து குணமானதால், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.

லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவா்களின் ஆலோசனையின் பேரில், கடந்த ஆக. 4-ஆம் தேதி பெங்களூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா் சித்தராமையா. அதன் பிறகு, அவரது தொண்டை சளி மாதிரி கரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதைத் தொடா்ந்து அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா சோதனைக்காக சித்தராமையாவின் தொண்டை சளி, ரத்த மாதிரிகள் ஆக. 11-ஆம் தேதி ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில் கரோனா பாதிப்பில் இருந்து சித்தராமையா குணமாகி இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து அவா் வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.

தனக்கு சிகிச்சை அளித்து, நன்றாக பாா்த்துக் கொண்ட மருத்துவா்கள், செவிலியா்களுக்கு நன்றி கூறிய 72 வயதாகும் சித்தராமையா, அடுத்த 14 நாள்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்க உள்ளாா். இதைத் தொடா்ந்து, அவரது வீட்டில் சித்தராமையாவை காங்கிரஸ் தலைவா்கள் சிலா் வரவேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT