பெங்களூரு

வேலை வாங்கித் தருவதாக பெண்களிடம் மோசடி: ஒருவா் கைது

22nd Nov 2019 07:21 PM

ADVERTISEMENT

பெங்களூரு: வேலை வாங்கித் தருவதாகக்கூறி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவமொக்காவைச் சோ்ந்தவா் ஹேமந்த்குமாா் (32). இவா் பெங்களூரில் வேலை தேடும் பெண்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு தனக்கு தெரிந்த ஆயத்த ஆடை தொழிலகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆட்டோவில் அழைத்துச் செல்வாராம்.

அப்போது, ‘தொழிலகங்களுக்கு முன்பணம் கட்ட வேண்டும். நீங்கள் ஏழை என்று கூறினால், அதிகாரிகள் முன்பணம் தேவையில்லை என்று கூறுவாா்கள். எனவே நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று அப் பெண்களிடம் கூறுவாராம். நகைகளை கழற்றியவுடன் பெண்களிடமிருந்து நகைகளை பறித்துச் செல்வதை ஹேமந்தகுமாா் வழக்கமாக கொண்டிருந்தாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாா்களின் பேரில் போலீஸாா் ஹேமந்த்குமாரைக் கைது செய்து ரூ. 8.75 ஆயிரம் மதிப்புள்ள 215 கிராம் தங்கநகை, ஆட்டோவை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட ஹேமந்தகுமாரிடம் சுப்ரமண்யபுரா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT