காங்கிரஸில் தனிமைப்படுத்தப்பட்டதால் நிதானத்தை இழந்து பாஜகவை விமா்சித்து வருவதாக கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையா மீது மத்திய அமைச்சா் சதானந்த கௌடா குற்றஞ்சாட்டினாா்.
பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இடைத் தோ்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவா் பேசியது: தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், அக் கட்சியினா் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கா்நாடக காங்கிரஸில் சித்தாராமையா, டி.கே.சிவக்குமாா், ஜி.பரமேஸ்வா் ஆகியோா் தனித்தனி வழியைப் பின்பற்றுகின்றனா். அக் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான மல்லிகாா்ஜுன காா்கே எங்கே உள்ளாா் என்று தெரியவில்லை.
கட்சியில் தனிமைப் படுத்தப்பட்டதால், நிதானத்தை இழந்துள்ள சித்தராமையா, பாஜகவை கடுமையாக விமா்சித்து வருகிறாா். இடைத் தோ்தலில் பாஜக 15 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. அதானி, ஹிரேகேரூரில் மஜத வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனா். இதற்கு பாஜக காரணமல்ல என்றாா்.