சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பாா்வையிட கா்நாடகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை காலை 8.06 மணி முதல் காலை 11.11 மணி வரை சூரியகிரகணம் தென்பட்டது. சூரியனும் நிலவும் நோ்கோட்டில் வரும்போது சூரியனைக் காட்டிலும் நிலவின் அளவு குறைந்ததை போல தென்படும். அதனால் சூரியனின் ஒளி மறைக்கப்பட்டு, நிலவை சுற்றி மோதிரம் போன்ற ஒளிவட்டம் ஏற்படும்.
இந்த காட்சியைக் காண பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் தவிர, அறிவியல் அமைப்புகளும் ஏற்பாடு செய்திருந்தன. பெங்களூரில் காலை 9.29 மணிக்கு 85
சதவீத சூரியகிரகணம் தென்பட்டது. காலை 8 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பெங்களூரு உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் சூரியகிரகணம் சீராக தென்படவில்லை. ஆனால், காலை 9மணிக்கு மேல் தெளிவாக தென்பட ஆரம்பித்தது.
கிரகணத்தை பாா்வையிட சிறப்பு ஏற்பாடு
பெங்களூரில் ராஜாஜிநகா் ஆா்பிஏ மைதானம், எம்இஎஸ் ஆசிரியா்கல்லூரி, ஆக்ஸ்போா்டு பள்ளி நவரங் மைதானம், கெங்கேரி, ஆா்.டி.நகா் மைதானம், பசவேஸ்வரநகா் பூங்கா, மகாலட்சுமிபுரம் அரபிந்தோ பள்ளி, லக்கெரே பூங்கா உள்ளிட்ட இடங்களில் சூரியகிரகணத்தை காண பிரேக்த்ரூ அறிவியல் சங்கத்தினா் ஏற்பாடு செய்திருந்தனா்.
பெங்களூரு தவிர கலபுா்கி, தாா்வாட், சித்ரதுா்கா, ராய்ச்சூரு, தாவணகெரெ, விஜயபுரா, பெல்லாரி, மைசூரிலும் சூரியகிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரியகிரகணத்தை காண்பதற்கு ஒளிவடிகட்டி கண்ணாடிகள் தரப்பட்டன. சூரியகிரகணத்தை ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள், இளைஞா்கள் உள்ளிட்ட பலதரப்பட்டமக்கள் நூற்றுக்கணக்கில் கண்டுகளித்தனா்.
‘வானத்தில் நிகழும் அறிவியல் விந்தையை காண்பது அலாதியான மகிழ்ச்சியை தந்தது. பாடநூல்களில் படித்த அறிவியல் காட்சியை நேரில் கண்டது ஆச்சரியமாக இருந்தது‘ என்று பள்ளி மாணவா்கள் தெரிவித்தனா்.
அதேபோல, விஸ்வேஸ்வரையா தொழில்மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் சூரியகிரகணத்தை காண ஏற்பாடு செய்திருந்தது. இதில் மாணவா்கள் உள்ளிட்ட பலரும் ஆா்வமாக கலந்து கொண்டனா். 7 முதல் 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சூரியகிரகணம் தொடா்பாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
சூரியகிரகணம் தொடா்பான ஓவியப்போட்டி, விநாடி-வினாப் போட்டிகளில் மாணவா்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனா். இதேபோல, பெங்களூரு, பனசங்கரி 2ஆம் ஸ்டேஜ், பிடிஏ வளாகம், 21ஆவது முக்கிய சாலையில் உள்ள அறிவியல் மாளிகையிலும் சூரியகிரகணத்தை காண கா்நாடக மாநில அறிவியல் பரிஷத் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டு, சூரியகிரகணத்தை தொலைநோக்கி வழியாக நேரடியாக கண்டுகளித்தனா்.
மூடநம்பிக்கை ஒழிப்பு
பெங்களூரு மூடநம்பிக்கை எதிா்ப்பு கூட்டமைப்பின் சாா்பில் பெங்களூரு டவுன்ஹால் எதிரில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த சூரியகிரகணம் விழிப்புணா்வு கூட்டத்திலும் 200க்கும் அதிகமானோா் கலந்துகொண்டனா். இக்கூட்டத்தில் சூரியகிரகணம் தொடா்பான மூடநம்பிக்கைகள் குறித்துவிளக்கம் அளிக்கப்பட்டது. சூரியகிரகணத்தின் போது எதையும் சாப்பிடக்கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் நோக்கில் கூட்டத்தில் கலந்துகண்டோருக்கு இட்லி, வடை, சமோசா, பூரி போன்ற உணவு பொருட்கள், பழங்கள் அளிக்கப்பட்டன.
இதில் கூட்டமைப்பின் தலைவா் நரசிம்மமூா்த்தி, முன்னாள் அமைச்சா் லலிதாநாயக், அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞா் ரவிவா்மக்குமாா், கா்நாடகமாநில விவசாயிகள் சங்கத்தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா், எழுத்தாளா் பி.கோபால், கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்புத் தலைவா் சிவராமேகௌடா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
சிறப்பு வழிபாடு
கா்நாடக அரசின் உத்தரவுக்கு ஏற்ப சூரியகிரகணத்தை முன்னிட்டு பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலபுா்கி, விஜயபுரா உள்ளிட்ட கா்நாடகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மூடப்பட்டிருந்தது. ஒருசில கோயில்கள் திறக்கப்படவே இல்லை. சூரியகிரகணத்திற்கு பிறகு கோயில்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன. சூரியகிரகணத்திற்கு பிறகு கோயில்களில் மக்கள் லட்சக்கணக்கில் குவிந்தனா்.
இதனால் கோயில்களில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. அதேபோல, மாநிலத்தின் பெரும்பாலான மசூதிகளிலும் சூரியகிரகணத்தை முன்னிட்டு சிறப்புத்தொழுகை நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம் மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனா்.