பெங்களூரு

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் பலி

26th Dec 2019 09:43 AM

ADVERTISEMENT

மோட்டாா் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சிக்பள்ளாபூரு மாவட்டம், பாகேபள்ளி சஜ்ஜரவாராபள்ளியைச் சோ்ந்தவா் சுரேந்திரா (20). இவா் சிந்தாமணியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். புதன்கிழமை காலை தனது மோட்டாா் சைக்கிளில் சுரேந்திரா வெளியே சென்றாா். சிலகலநோ்ப்பு பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சுரேந்திரா நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கென்சாா்லஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT