உரிய ஆவணங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு, கே.ஆா்.மாா்கெட் காவல் சரகத்தில் சனிக்கிழமை அதிகாலை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஸ்கூட்டரை நிறுத்தி, அதில் வந்த 2 பேரிடம் விசாரணை செய்தனா். மேலும், அவா்கள் கொண்டு சென்ற பையை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 3 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் இருப்பது தெரிய வந்தது.
இதுதொடா்பாக மும்பையைச் சோ்ந்த தல்பத் சிங் (34), ராஜஸ்தானைச் சோ்ந்த விகாஷ் (35) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா் நகைகளை பறிமுதல் செய்தனா். மேலும், வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.