புதிய ஹோண்டா கார் அறிமுகம்

புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை ஹோண்டா நிறுவனத்தினர் பெங்களூரில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தனர்.
புதிய ஹோண்டா கார் அறிமுகம்

புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை ஹோண்டா நிறுவனத்தினர் பெங்களூரில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தனர்.

பெங்களூரில் திங்கள்கிழமை டபுள்யூஆர்-வி காரை அறிமுகம் செய்து வைத்த ஹோண்டா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர்சென் பேசியது: சர்வதேச அளவில் நவீன தொழில்நுட்ப கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகமாகியுள்ளது.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் புதிய தொழில்நுட்பங்களுடன் டபுள்யூஆர்-வி காரை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். இந்த கார் இளைஞர்களை அதிகளவில் கவரும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் 35 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் 65 சதவீதம் உள்ளனர்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கும் இந்த கார், எரிபொருள் சிக்கனம் கொண்டதாகும். டபுள்யூஆர்-வி கார் 6 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இதன் விலை ரூ.7.90 லட்சத்தில் தொடங்குகிறது என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com