* மற்றவர்களின் நன்மைக்காக வாழ்பவர்களே வாழ்பவர்கள்; மற்றவர்கள் நடைபிணத்துக்குச் சமமானவர்கள்.
* பிறருக்குச் செய்யும் அற்ப சேவையும்கூட உங்களிடம் பேராற்றலை விழிப்படையச் செய்யும். - சுவாமி விவேகானந்தர்
* ஒன்றாக இருந்த பிரம்மம் பலவாகப் பெருகியது; அண்டங்களாகவும் அனைத்து உயிர்களாகவும் மலர்ந்தது. எனவே, அனைத்திலும் அமர்ந்து உறைவது பிரம்மமேயாகும். அதுவே நம் உள்ளத்திலும் ஒளிர்கிறது. அதை நாம் "ஆத்மா' என்று சொல்கிறோம். - சாந்தோக்கிய உபநிடதம்
* இயற்கையின் இயக்கம் ஒவ்வொன்றுக்கும், மனிதனின் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் அடிப்படையாக பிரம்மசக்தியே இருக்கிறது.
* பிரம்மத்தைப் பற்றி நாவால் பேச இயலாது. ஏனென்றால் நாவைப் பேச வைப்பதே பிரம்மம்தான். - கேனோபநிடதம்
* பரப்பிரம்மமே ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற பஞ்ச பூதங்களாக இருக்கிறது. - பிரச்ன உபநிடதம்
* ஆரம்பம், நடு, முடிவு ஆகியவை எதுவும் இல்லாதது பிரம்மம். - கைவல்ய உபநிடதம்
* மரணம் நேர்ந்தாலும் சுயநலம் கருத வேண்டாம். சேவை செய்வதை மறக்க வேண்டாம்.
* பிறர் நன்மைக்காக உழைப்பது மனதின் கோணல்களைத் திருத்துகிறது. - சுவாமி விவேகானந்தர்
* பிரம்மம் எல்லாவற்றையும் காண்கிறது. அனைத்தையும் அறிகிறது. - முண்டக உபநிடதம்
* நம் அகத்தில் ஒளிரும் ஆன்ம ஒளியை, பரத்தில் நிலவும் பிரம்மத்தின் ஒளியோடு ஒன்றாக்க வேண்டும். - சுவேதாஸ்வதர உபநிடதம்
* ஆத்மானந்தத்தில் திளைத்தவர்கள் திளைப்பவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. - தைத்திரீய உபநிடதம்
* அனைத்து மதத்தினரும் சகோதர பாசத்துடன் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வேண்டும். - குருநானக்