பழமொழி நானூறு
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு
பூமேல் இசைமுரலும் ஊர! அதுவன்றோ
நாய்மேல் தவிசிடு மாறு. (பா-75)
பொறிவண்டு பூமேல் இசை முரலும் ஊர புள்ளிகளையுடைய வண்டுகள் பூக்களின்மீது இருந்து இசைபாடும் மருதநிலத் தலைவனே! அறிவிற் பெரியார்க்குச் செய்யும் சிறப்பினை விரும்பி, அறிவிற் சிறியார்க்குச் செய்தல், அச்செயலன்றோ யானைமேல் இடவேண்டிய கல்லணையை, இழிந்த நாயின் மீது இட்டதை ஒக்கும்.
(க-து.) பெரியோர்க்குச் செய்யும் சிறப்பினைச்சிறியோர்க்குச் செய்தலாகாது. "நாய்மேல் தவிசிடுமாறு' என்பது பழமொழி.