அன்புக்கு ஈடு இணை உண்டோ!

உண்மை நிகழ்வு இது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சோபிரன் என்பவர் ஒருநாள் வியாபாரத்தை முடித்துவிட்டு,
அன்புக்கு ஈடு இணை உண்டோ!

உண்மை நிகழ்வு இது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சோபிரன் என்பவர் ஒருநாள் வியாபாரத்தை முடித்துவிட்டு, வண்டியை தள்ளிக் கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் ஒரு புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தபோது அழகான பெண் குழந்தை. வாஞ்சையுடன் அக்குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்தார்.
அக்குழந்தையின் மேல் உள்ள அன்பினால் தான் கல்யாணம் செய்யும் எண்ணத்தை துறந்து மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை வளர்த்து படிக்கவும் வைத்தார். அக்குழந்தைக்கு ஜோதி என்று பெயர் வைத்து ஆளாக்கினார். ஜோதி நன்கு படித்து ஐ.ஏ.எஸ்.க்கு நிகரான ஐ.ஆர்.எஸ். படித்து வருமான வரித்துறை உதவி கமிஷனராக பதவி ஏற்றுள்ளார். பதவி ஏற்றபோது சோபிரன் கண்களில் நீர் வழிய ஜோதியும் அழுதாள்.
இன்றும் ஜோதி எவ்வளவோ சொல்லியும் காய்கறி வியாபாரத்தை சோபிரன் விடவில்லை. தற்போது ஜோதிக்கு வரன் பார்த்துக் கொண்டு உள்ளராம் சோபிரன். இந்த அன்புக்கு ஈடு இணை இவ்வுலகில் உண்டோ!
- விசாலாட்சி


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com