இனியாவது தெரிந்துக் கொள்ளுங்கள்!

ஒவ்வொரு எரிவாயு உருளை வாங்கும்போதும், வாடிக்கையாளரின் பெயரில் ரூ.40 லட்சம் காப்பீடும் தரப்படுகிறது.
இனியாவது தெரிந்துக் கொள்ளுங்கள்!

ஒவ்வொரு எரிவாயு உருளை வாங்கும்போதும், வாடிக்கையாளரின் பெயரில் ரூ.40 லட்சம் காப்பீடும் தரப்படுகிறது. அந்தக் காப்பீட்டைப் பெறுவதற்கு இந்த ரசீது அவசியம். எரிவாயு உருளையில் விலையுடன் காப்பீட்டுக்கான தொகையும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
 இது குறித்த விழிப்புணர்வு வாடிக்கையாளர்களுக்கு இல்லை. இந்த விழிப்புணர்வை அரசோ, காப்பீட்டு நிறுவனங்களோ, எண்ணெய் நிறுவனமோ வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்துவதுமில்லை. அதனால், எரிவாயு உருளை விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் காப்பீட்டுத் தொகையைக் கேட்பதில்லை. அப்படியே காப்பீடு கோரினாலும், அவர்களிடம் ரசீது இருப்பதில்லை.
 சமையில் எரிவாயு உருளை வாங்கும்போது தரப்படும் ரசீதைக் கிழித்தெறிந்து விடாதீர்கள். எரிவாயு தீரும்வரை பத்திரப்படுத்த வேண்டும். இனியாவது நாம் கவனமாக இருப்போம். இதற்கான இலவச விசாரணை எண் - 1800 2333 555
 - சத்தீஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com