உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா குமார். அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி விட்ட பூஜாகுமார், கதை கேட்பதற்காக மட்டுமே சென்னைக்கு வந்து செல்கிறார். இந்நிலையில் சினிமா குறித்த தனது புதிய விருப்பத்தை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது.. ""சரித்திர பின்னணி மற்றும் பீரியட் படங்கள், சுயசரிதை படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மூத்த நடிகை வைஜெயந்தி மாலா வாழ்க்கை வரலாறு, பாலிவுட் நடிகை ரேகா சுயசரிதை போன்றவை படமாக்கப்பட்டால், அவர்களின் வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். முழுநீள சரித்திரப் பின்னணி கொண்ட கதையில், குறிப்பாக, ஜான்சி ராணி கதையில் நடிக்க காத்திருக்கிறேன். பிரியதர்ஷன் இயக்கத்தில், "த இன்விஸிபிள் மாஸ்க்' என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறேன். மேலும், மலையாளத்தில் அவர் இயக்கும், குஞ்சாலி மராக்கரின் சுயசரிதையில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார் பூஜாகுமார்.