மேக்கேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேக்கேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மேக்கேதாட்டு அணையால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் வரத்தில் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

அது எந்த அளவுக்கு உண்மை என்று ஆராய வேண்டும். அப்படி இருந்தது என்றால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பூர்வ நடவடிக்கைதான் இதற்கு ஒரே வழி. பேட்ட திரைப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ளேன். பேட்ட வெளியான பிறகு அடுத்தப் படம் குறித்து சொல்கிறேன்.

ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா குறித்த கேள்விக்கு, ஆர்பிஐ ஆளுநர், ராஜினாமா செய்தது ஏன் என்ற உண்மை தெரியாமல் எதையும் சொல்ல முடியாது. 5 மாநில தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு, அதற்கான பதிலை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com