பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளனர் என 5 மாநில தேர்தல் நிலவரம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
5 மாநில தேர்தல் நிலவரம், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வளர்ச்சி குறைந்துவிட்டது. பண மதிப்பு ரத்து நடவடிக்கையால் தொழில் வளர்ச்சி முடங்கிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.