நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது. வெற்றியால் பாஜக துள்ளிக் குதிப்பதும் இல்லை. தோல்வியால் துவள்வதும் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என இயந்திரத்தனமாக குற்றஞ்சாட்டி வந்தனர்.
பாஜக வெற்றி பெற்றால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வந்தது. வாக்குப்பதிவு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா?. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.
5 மாநிலத் தேர்தல் முடிவுகளை பற்றி கவலைப்படாமல் நாடாளுமன்ற தேர்தலுக்கு கடுமையாக உழைப்போம். மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை, மோடி அலையை ஓய வைக்கவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.