நரேந்திர மோடி அரசுக்கு எதிராக அலை வீசுகிறது: வைகோ

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக அலை வீசுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 
நரேந்திர மோடி அரசுக்கு எதிராக அலை வீசுகிறது: வைகோ

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக அலை வீசுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசினார். இரு கட்சிகள் இடையே மனக்கசப்பு நிலவி வரும் நிலையில் வைகோ, திருமாவளவன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைவோ, 
திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை, காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது. எங்களுக்குள் யாரும் சிண்டு முடிய முடியாது. நரேந்திர மோடி அரசுக்கு எதிராக ஒரு அலை வீசுகிறது. 

ஜனநாயகம் காக்கப்படும் என 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. 
பேராபத்து நம்மை சூழ்ந்திருக்கிற நிலையில் பாஜக வீழ்ந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com