ஊரும் பேரும்

செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் பிறந்தது திருக்கோடிக்காவல் என்னுமிடத்தில்.
ஊரும் பேரும்

செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் பிறந்தது திருக்கோடிக்காவல் என்னுமிடத்தில். அவருடைய பெரியப்பா மகன் செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயரிடம் சங்கீதம் கற்பதற்காக ஏழாம் வயதில் செம்மங்குடிக்கு வந்தார். பின்னாளில், அவருடைய முதல் குருவின் ஊர் பெயரே ஸ்ரீநிவாச ஐயர் பெயருக்கு முன்னால் சேர்ந்து கொண்டது!
அதேபோல, முசிறி சுப்பிரமணிய ஐயர் பெயருக்கு முன்னால் ஊர் பெயர் தற்செயலாகத்தான் கிடைத்தது. அவர் பிறந்த ஊர் பொம்மலபாளையம். அவருடைய தாய்மாமா முசிறி சாஸ்திரியுடன் சேர்ந்து பாட சென்னை வந்தார். இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகள் அறிவிக்கும்போது, ""முசிறி சாஸ்திரி, முசிறி சுப்பிரமணிய ஐயர் பாட்டுக் கச்சேரி நடைபெறும்'' என்று அறிவித்துவிட்டார்கள்! அப்போதிலிருந்து அவர் முசிறி சுப்பிரமணிய ஐயர் என்றே அறியப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com