டென்மார்க் ஓபன்: சாய்னா இரண்டாம் இடம்

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சாய்னா நெவால் போராடி தோல்வியுற்றார்.
டென்மார்க் ஓபன்: சாய்னா இரண்டாம் இடம்

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சாய்னா நெவால் போராடி தோல்வியுற்றார்.
 ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும். சீன தைபேவைச் சேர்ந்தவருமான டைசூ யிங்கும்-சாய்னாவும் மோதினர்.
 இதில் முதல் கேமை 13-21 என இழந்த சாய்னா, பின்னர் வீறு கொண்டு அபாரமாக ஆடி 21-13 என இரண்டாவது கேமை கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட டைஸþ கடைசி கேமில் ஆதிக்கம் செலுத்தி 21-6 என எளிதாக வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இரண்டாண்டுகளுக்கு பின் டைசு டென்மார்க் ஓபன் பட்டம் வென்றுள்ளார். சாய்னாவை 13-ஆவது முறையாக வென்றார் டை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com