டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சாய்னா நெவால் போராடி தோல்வியுற்றார்.
ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும். சீன தைபேவைச் சேர்ந்தவருமான டைசூ யிங்கும்-சாய்னாவும் மோதினர்.
இதில் முதல் கேமை 13-21 என இழந்த சாய்னா, பின்னர் வீறு கொண்டு அபாரமாக ஆடி 21-13 என இரண்டாவது கேமை கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட டைஸþ கடைசி கேமில் ஆதிக்கம் செலுத்தி 21-6 என எளிதாக வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இரண்டாண்டுகளுக்கு பின் டைசு டென்மார்க் ஓபன் பட்டம் வென்றுள்ளார். சாய்னாவை 13-ஆவது முறையாக வென்றார் டை.