பகுதி - 931

நிறை மதி முகம் எனும் ஒளியாலே..
பகுதி - 931

பதச் சேதம்

சொற் பொருள்

நிறை மதி முகம் எனும் ஒளியாலே

 

 

நெறி விழி கணை எனு(ம்) நிகராலே

 

 

உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ

 

 

உன திருவடி இனி அருள்வாயே

 

 

மறை பயில் அரி திரு மருகோனே

 

 

மருவலர் அசுரர்கள் குலகாலா

 

மருவலர்: பகைவர்கள்;

குற மகள் தனை மணம் அருள்வோனே

 

 

குருமலை மருவிய பெருமாளே.

 

குருமலை: சுவாமி மலை;

நிறைமதி முகமெனும் ஒளியாலே... முழுமதியை ஒத்த முகத்தின் பிரகாசத்தாலும்;

நெறிவிழி கணையெனு நிகராலே... வழிகாட்டுகிற கண்கள் என்னும் அம்புகள் செய்கின்ற போராலும்;

உறவுகொள் மடவர்கள் உறவாமோ... உறவு கொண்டாடுகின்ற பெண்களுடைய உறவு தகுமோ?

உனதிரு வடியினி யருள்வாயே... இனியேனும் உன்னிரு திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

மறைபயி லரிதிரு மருகோனே... வேதங்களில் விளங்குகின்ற திருமாலுக்கும் இலக்குமிக்கம் மருகனே!

மருவல ரசுரர்கள் குலகாலா... பகைவர்களாகிய அசுரர்களின் குலத்துக்குக் காலனாக விளங்குபவனே!

குறமகள் தனை மண மருள்வோனே... குறமகளான வள்ளியை மணமுடித்தவனே!

குருமலை மருவிய பெருமாளே.... சுவாமிமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

வேதங்களில் பயில்கின்ற திருமாலின் மருகனே! பகைவர்களான அசுரர்களுடைய குலத்துக்கு யமனாக விளங்குபவனே!  குறமகளான வள்ளியை மணமுடித்தவனே! சுவாமி மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

பூரண சந்திரனைப் போன்ற முகத்தின் ஒளியாலும்; வழிகாட்டுகின்ற கண்களாகிய அம்புகள் விளைக்கின்ற போராலும் என்னோடு உறவாடவரும் பெண்களுடைய தொடர்பு முறையானதோ? இத்தகைய தீவினைகள் அறும்படியாக உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com