சென்னை, அண்ணாசாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கத்தில் 49-ம் ஆண்டு ஐயப்ப சுவாமி மலர் பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 28-ம் நாள் 14.12.2018 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி அளவில் சென்னை, பார்டர்தோட்டம் 63-வது வட்டம் எண் 11 & 12 L.G.N சாலையில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ காமாட்சியம்மன் அறக்கட்டளை வளாகத்தில் ஸ்ரீ ஐயப்பசுவாமி கொலு மண்டபத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் 49-ம் ஆண்டு மலர் பூஜையும் புஷ்பாஞ்சலியும் அன்னதானமும் இவ்வாண்டும் வெகு சிறப்பாக நடத்திட தீர்மானிக்கப்பட்டு இருப்பதை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஸ்ரீ ஐயப்ப சுவாமிமார்களும், ஆன்மிகப் பெருமக்களும், வியாபாரப் பெருமக்களும் மகா உற்சவத்தில் பெருவாரியாகக் கலந்துகொண்டு ஒத்துழைத்து, இவ்விழாவினை சிறப்பித்து ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.
மேலும் தொடர்புக்கு: 9445511145, 9444363397