மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் டிசம்பர் 14 முதல் எண்ணெய்க் காப்பு உற்ஸவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் டிசம்பர் 14 முதல் எண்ணெய்க் காப்பு உற்ஸவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு உற்ஸவம் டிசம்பர் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உற்ஸவ நாட்களில் தினமும் மாலை அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி அங்கு தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்து பின் சித்திரை வீதிகளை சுற்றி கோயில் சென்றடைவார். 

டிசம்பர் 21-ல் கோ ரதமும், டிசம்பர் 22-ல் கனக தண்டியலில் அம்மன் உற்வலமும், 23-ல் திருவாதிரையன்று பொன்னூஞ்சலில் வலம் வந்து கோயிலை அடைவர். டிசம்பர் 14 முதல் 23 வரை மாணிக்கவாசகர் சுவாமிகள் நூறுகால் மண்டபத்தில் எழுந்தருளி தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடி தீபாரதனை உற்ஸவம் நடைபெறும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com