மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு உற்ஸவம் டிசம்பர் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உற்ஸவ நாட்களில் தினமும் மாலை அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி அங்கு தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்து பின் சித்திரை வீதிகளை சுற்றி கோயில் சென்றடைவார்.
டிசம்பர் 21-ல் கோ ரதமும், டிசம்பர் 22-ல் கனக தண்டியலில் அம்மன் உற்வலமும், 23-ல் திருவாதிரையன்று பொன்னூஞ்சலில் வலம் வந்து கோயிலை அடைவர். டிசம்பர் 14 முதல் 23 வரை மாணிக்கவாசகர் சுவாமிகள் நூறுகால் மண்டபத்தில் எழுந்தருளி தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடி தீபாரதனை உற்ஸவம் நடைபெறும்.