கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற அருட்திரு மூர்க்க நாயனார் குருபூஜை விழாவில் வேளாக்குறிச்சி ஆதீனம் சிறப்பு வருகை புரிந்தார்.
கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகிய, அருட்திரு மூர்க்கநாயனார் குருபூஜை சிறப்பு வழிபாடு விழா டிசம்பர் 8ஆம் தேதி அன்று காலையில் துவங்கியது.
இவ்விழாவில், வேளாக்குறிச்சி ஆதீனம், 18-வது குருமகா சந்நிதானம், சத்தியஞானமகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருமுன்னர் நடைப்பெற்றதைத் தொடர்ந்து, மாலை அருட்திரு மூர்க்க நாயனார் [உற்சவர் ] சிறப்பு அலங்காரத்தில் திருக்கோயில் உட் பிரகார வீதிஉலா மிக சிறப்பாக நடைப்பெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆலைய நிர்வாகிகளும் அடியார்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.