பாஜக-வுக்கு எதிராக போட்டியிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: சச்சின் பைலட்

ராஜஸ்தானில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறதி, தற்போது பாஜக-வுக்கு எதிராக போட்டியிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று சச்சின் பைலட் தெரிவித்தார். 
பாஜக-வுக்கு எதிராக போட்டியிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: சச்சின் பைலட்

ராஜஸ்தானில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறதி, தற்போது பாஜக-வுக்கு எதிராக போட்டியிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று சச்சின் பைலட் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் கடந்த முறையை விட தற்போது 100 தொகுதிகளை பாஜக இழக்கிறது. இந்த தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக போட்டியிட்ட அனைவரும் ஒரு அணியில் திரள வேண்டும். மத்தியில் மட்டுமல்லாது மாநிலங்களின் அளவிலும் இதுகுறித்து அனைவரிடமும் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. அப்போதுதான் பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்ற அனைவரது நோக்கம் நிறைவேறும். 

ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையாக உள்ளேன். ஆனால் இங்கு காங்கிரஸ் அரசு அமைப்பதை விட மக்களின் அரசை அமைக்கவே நாங்கள் விரும்புகிறோம். பாஜக-வை வீழ்த்தும் இந்த திட்டமானது அடுத்து வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும். 

ராஜஸ்தானில் வெற்றிபெற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் புதன்கிழமை கலந்து ஆலோசித்து முதல்வரை தேர்வு செய்ய உள்ளோம். இங்கு பாஜக-வும் ஆட்சி அமைக்க அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம். ஆனால், அது நிச்சயம் வெற்றிபெறாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com