நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் அயோத்தி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் வேள்வி எழுப்பும் எனத் தெரிகிறது.
இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செயதியாளர்களுக்கு பேட்டியில் அளித்த பிரதமர் மோடி,
மக்களின் பல பிரச்னைகள் குறித்து பேச இருப்பதால் குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது. அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
எனவே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.