தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து ஆராய வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராவுல சந்திரசேகர ரெட்டி கூறியதாவது:
தெலங்கானா தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து உடனடியாக ஆராய வேண்டும். அதில் சந்திரசேகர ராவுக்கு கிடைத்த வெற்றி மற்றும் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வி குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
இந்த தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் எங்கள் கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என கருதி இருந்தோம். ஆனால், இந்த தேர்தல் முடிவுகள் எங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.
இதில் எங்கு தவறு நடந்துள்ளது என்பது குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும். அதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் இந்த தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.