திட்டமிட்டபடி இன்று ரயில்வே தேர்வு

ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளால் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தால் டெக்னிஷியன்ஸ், லோகோ பைலட் இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறுமா? என கேள்வியெழுந்தது.
இந்நிலையில், அந்தத் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இந்திய ரயில்வே தகவல் தொடர்பு துறை இயக்குநர் ராஜேஷ் வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
எனினும், கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அந்த மாநிலத்தில் மட்டும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கேரளத்தில் இந்தத் தேர்வுகளை 27 ஆயிரம் பேர் எழுத இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com