அதிமுக 47-வது ஆண்டு விழா தொடக்க நிகழ்ச்சி முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சிக் கொடியேற்றி வைத்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். எம்.ஜி.ஆர். அடுத்து 30 ஆண்டுகள் அந்த இயக்கத்தை ஜெயலலிதா வழிநடத்தினார்.