பெங்களூரில் அருகில் உள்ள சிக்கஹள்ளியில் உள்ள மிகப் பெரிய ஆலமரத்தில் விளையாடும் குரங்குகள். இந்த ஆலமரமானது மேலே குடை விரித்தது போல் அழகாக படர்ந்திருக்கும். இம்மரத்தை குறைந்தது 400 வருடங்களாக பரம்பரை, பரம்பரையாக பராமரித்து வருகிறது ஒரு குடும்பம். வார இறுதி நாட்களில் ஆலமரத்தை பார்க்கவும், ரசித்துச் செல்லவும் பெரும் கூட்டம் வருகிறது.